அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Photo of author

By Parthipan K

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்  இரண்டு ஆடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து பிடிஆர் கூறும் போது இது முற்றிலும் போலியானவை என்னுடைய அரசியல் எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் போலி காணொளி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

போலியாக எங்கள் மீது அவதுறு பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் அவர் கூறும் போது யாரிடமும் போனில்லோ அல்லது தனிப்பட்ட  முறையில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.

நான் எப்படி உதயநிதி ஸ்டாலின் பற்றியும், நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல தோழனாகவும், எனக்கு பலவிதமான ஆலோசனை வழங்குபவர் சபரீசன் அவர்களையும் நான் எவ்வாறு தவறாக பேசுவேன் என்று கூறினர்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இவர்களிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் பிடிஆர். என்னை இவர்களிடம் இருந்து பிரிப்பதன் மூலம் தங்களது பழிவாங்கும் எண்ணத்தை தீர்த்துக்கொள்ள பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.