ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

0
121

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக தெரிகிறது

காஜல் அகர்வால் உட்கார்ந்திருந்த இடத்தில் தான் அந்த கிரேன் விழுந்ததாகவும், அவர் உட்கார்ந்திருந்த சேர் கிரேனால் நசுங்கியதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு நொடி பொழுதில் சுதாரித்த காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் ’இந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியவில்லை. ஒரு நொடி என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை நேற்று நான் புரிந்து கொண்டேன். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்