மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறது சக்திமான்

0
181

மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறது சக்திமான்

இந்தியாவில் இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து நாடெங்கும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்குப் பொழுதுபோக்கும் விதமாகப் பல சேனல்கள் தங்கள் பிரபலமான தொடர்களை மீண்டும் ஒலிப்பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் டிடி நேஷனல் சேனல் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை ஒளிப்பரப்பி வருகிறது.அந்த வரிசையில் தற்போது 80 ஸ் கிட்ஸ்களின் பிரசித்திப் பெற்ற தொடரான சக்திமான் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது என்று அத்தொடரின் நடிகரும் தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

காலத்தால் அழியாத தொடர்களில் சக்திமான் தொடரும் ஒன்று. நாம் குழந்தையாக இருந்தபோது நாம் கண்டு மகிழ்ந்த சக்திமானை நம் குழந்தைகளுக்கும் காட்டும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே மீண்டும் உங்களை மகிழ்விக்க உங்கள் இல்லம் தேடி வருகிறார் சக்திமான்.

Previous articleஉணவில்லாமல் தவித்த 50பிகார் கூலித்தொழிலாளிகள் : சாப்பாடு கிடைத்தது எப்படி? முதல்வருக்கு நன்றி சொன்னது ஏன்?
Next articleபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு – அரசுக்கு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here