மஹாராஜா ஜெய் சிங்கிடம் அசிங்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் : வரலாறை பின்னோக்கி பார்ப்போம்!

ஒருமுறை ராஜா ஜெய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்றிருந்தார், அங்கு சாதரணமாக தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.

அங்கிருந்து ஷோரூம் ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல்
ஒரு ஏழை இந்திய குடிமகனாக நினைத்து அவரை அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த ராஜா தனது
ஓட்டல் அறைக்கு சென்று பிறகு சில மணி நேரம் கழித்து தனது விலை உயர்ந்த ராஜ உடையில் மீண்டும் அதே ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .

இந்த முறை ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்து சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர். மஹாராஜா ஜெய் சிங் 6 விதமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தேர்வு செய்து முழு தொகையும் செலுத்தி வாங்கினார்.

விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை கப்பல் மூலம் கொண்டு வந்தார், நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய அந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தர விட்டார்.உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட செய்தி ,விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுப்போனது.

இந்த சம்பவத்திற்கு பிறகு யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால், இது
இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம்
செய்யும் நிலைமைக்கு ஆளானது.

இதன் காரணமாக நிறுவனத்தின்
மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜா ஜெய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார். அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை
குப்பை அல்ல பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பிரதிபலனாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பதிலளித்த மஹாராஜா ஜெய் சிங் ‘எனக்கு உங்கள் கார்கள் மேல் வெறுப்பு இல்லை, உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர், அதற்கு பதிலாக தான் நான் உங்கள் கார்களை குப்பை அள்ள உபயோகித்தேன். முதலில் மக்களை மதியுங்கள் என்று வெள்ளை காரனை செவிட்டில் அறைந்தார் போல பதில்
அனுப்பினார்.

Leave a Comment