வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

0
116

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர்.

கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். இதில் பெண்களும் அதிக அளவில் காணப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டால் மதுக்களை வாங்க முடியாதோ என எண்ணிய ஒரு குடிமகன் 52000 ரூபாய்க்கு மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இது குறித்து நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேலும் ஒரு பெங்களூரில் இவரையும் விஞ்சும் வகையில் சுமார் 95 ரூபாய்க்கு ஒருவர் சோம பானத்தை வாங்கி பத்திரப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட குடிமகன்களின் தேச பக்தியால் ஒரே நாளில் 45 கோடி ரூபாய் அளவுக்கு மது பானங்கள் மூலம் வசூலாகியுள்ளதாக கரநாடக அரசு அறிவித்துள்ளது.