சற்றுமுன்: பிரதமர் உயிருக்கு வந்த ஆபத்து.. வீட்டின் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்!! 

0
87
A while ago: Prime Minister's life was in danger.. Sudden drone attack on the house!!
A while ago: Prime Minister's life was in danger.. Sudden drone attack on the house!!

கடந்த வருடம் தொடங்கிய இஸ்ரேல் ஈரான் போரானது தற்பொழுது வரை முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகளின் ஆதரவானது ஈரானுக்கு எதிராகவே அமைந்தது. இந்த இரு நாடுகளிடையேயான தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிட்டது. இதனை ஒரு பொழுதும் ஈடுகட்ட முடியாது.

இவ்வாறு இருக்கையில் ஈரானின் ஹமாஸ் தலைவர் யாஹியா சிங்கரின் தற்போது நடந்த மோதலில் உயிரிழந்தார். இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து இதை ஈரான் தலைவர் அயதுல்லா, இதை கண்டு நாங்கள் துவண்டு போவதில்லை என கூறினார். இவ்வாறு இருக்கையில் ஹமாஸ் குழு ஒரு போதும் பொறுமையாக இருக்காது என அனைவரும் யூகித்த ஒன்றுதான்.

அந்த வகையில் தற்பொழுது இஸ்ரேலில் பிரதமர், நிதன்யாகு வின் இல்லத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் பிரதமர் இல்லை என கூறியுள்ளனர். மேற்கொண்டு ட்ரோன் மூலம் இஸ்ரேலில் சிசேரியா என்ற கட்டிடம் ஒன்றையும் தாக்கியுள்ளனர். ஆனால் யாருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இந்த ட்ரோனுடன் ஆளில்லா விமானமும் பறந்ததாகவும் மேற்கொண்டு அவர்களுக்கு எச்சரிக்கை ஒலியும் ஒழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.