ஜெயலலிதாவிற்கு சினிமா துறையில் முதல் படம் எம்ஜிஆர் உடன் ஆனது. படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்கள் நடந்து கொண்ட விதம் எம் ஜி ஆர் ஐ மிகவும் கவர்ந்து எம்ஜிஆரின் உடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் மாற அதுவே காரணமாக அமைந்திருக்கிறது.
ஜெயலலிதா அவர்களுக்கு முதல் படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த தருணத்தில் எம்ஜிஆர் வருகிறார் என்ற உடனே அந்த படப்பிடிப்பு தலைமை பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அப்பொழுது அனைவரும் எழுந்து நிற்கவே இயக்குனர் ஜெயலலிதா இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவரிடம் சென்று எழுந்து நிற்க கூறியிருக்கிறார்.
பி ஆர் பந்தலு அவர்கள் கூறியதற்கு நடிகை ஜெயலலிதா அவர்கள் அவரும் இந்த திரைப்படத்தில் நடிகர் நானும் திரைப்படத்தில் நடிக்கிறேன். நீங்கள் கூறியதற்காக வேண்டுமென்றால் அவர் என் அருகில் வரும் பொழுது எழுந்து நின்றோ அவரை வணங்குகிறேன் என தெரிவித்திருக்கிறார். எம்ஜிஆர் அவர்களுக்கு எப்பொழுதும் தனி மரியாதையும் அவருடைய ஆளுமையின் கீழ் அனைத்தும் இருக்கக்கூடிய சூழல் இருப்பதால் ஜெயலலிதா இவ்வாறு பேசியது அவருடைய காதுகளுக்கு சென்று இருக்கிறது.
அதன் பிறகு அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்தில் கட்டாயமாக ஜெயலலிதாவிற்கு பதிலாக வேறொரு கதாநாயகி திரைப்படத்தில் இடம் பெறுவார் என நினைத்த நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் ஜெயலலிதாவின் உடைய இந்த தன்னம்பிக்கையும் திமிரும் தனக்கு மிகவும் பிடித்து விட்டதாக தெரிவித்ததோடு அவரை அந்த படத்தில் இருந்து விளக்கவும் இல்லையாம். பிற்காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் உடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் மாறுவதற்கு இதுவே ஆரம்பம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.