அமெரிக்கா மீது அதிகமான இறக்குமதியை விதிக்கும் இந்தியா சீனா உள்ளிட்ட 75 நாடுகளுக்குல் அமெரிக்கும் அதிக வரி விதிக்கும் என ஏற்கனவே அறிவித்த டிரம்ப் சொன்ன படை வரி விதிப்பையும் அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவித்தார். எனவே, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார் டிரம்ப். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தது..
அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிக்கிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியது.
ஆனால், அப்போதும் இறங்கிவராத சீனா அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக உயர்த்தியது சீனா. நீங்கள் 50 சதவீத கூடுதல் வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் என காட்டினார் சீன அதிபர்.
இந்நிலையில், சீனாவுக்கு 125 சதவீத வரியை அதிகப்படுத்திய டிரம்ப் இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான பதிலுகு பதில் விதிக்கும் வரியை 96 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார். டிரம்பின் அறிவிப்புக்கு சீனா என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.