2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.
எனவே, இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காட்டி மிரட்டும் வேலையெல்லாம் எங்களிடம் நடக்காது. அமித்ஷா இல்லை.. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பலிக்காது. 2026-லிலும் திராவிட ஆட்சிதான்’ என பேசினார் ஸ்டாலின். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘1999ம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என கூறினார் கருணாநிதி. பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது இனித்தது, அதிமுக கூட்டணி வைத்தல் மட்டும் ஸ்டாலினுக்கு கசக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார்.,
மேலும், ‘முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக ஒரு வாருடம் வைத்திருந்தபோது திமுகவுக்கு பாஜக நல்ல கட்சியாக தென்பட்டது. இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின் அது கெட்ட காட்சி ஆகிவிடுமா?.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலின் ஏன் பதறுகிறார்?., ஏன் பயப்படுகிறீர்கள்?. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியை அமைப்போம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்’ என கூறினார்.