தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு எப்போது?.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!…

Photo of author

By அசோக்

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு எப்போது?.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!…

அசோக்

college

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் மட்டுமில்லாமல் பெற்றோர்களிடமும் இருக்கும். சமீபத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 10, 11. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, ஜூன் 2ம் தேதிகள் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. 2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.