உங்கள் பிறந்த நாளை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமையும் தனித்துவமானவையாக இருக்கின்றது.அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிறந்த கிழமை தனித்துவமானதாக இருக்கிறது.ஜோதிட சாஸ்திரப்படி பிறந்த கிழமை பொறுத்து அவர்களின் சிறப்பு அறியலாம்.பிறந்த நட்சத்திரம்,ராசி எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் நாம் பிறந்த கிழமையும் முக்கியம்.
பிறந்த கிழமையும் உங்கள் குணாதிசயமும் இதோ:
1)ஞாயிற்றுக்கிழமை
இந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.இவர்களிடம் அதிக நம்பிக்கை இருக்கும்.இவர்களிடம் அதிக நேர்மறை எண்ணங்கள் இருக்கும்.
2)திங்கட்கிழமை
இந்த தினத்தில் பிறந்தவர்களிடம் பொறுமை என்பது அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.திங்கட்கிழமை பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3)செவ்வாய் கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் துரோகத்தை பெருங்குற்றமாக நினைப்பார்கள்.நியாயம் மற்றும் நீதிக்கு கட்டுப்பட்டவர்களாக செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
4)புதன்கிழமை
புத்திசாலிகள் புதன் கிழமையில்தான் பிறப்பார்கள்.இவர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவார்கள்.செய்லகளில் இறங்கும் முன் நன்றாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
5)வியாழக்கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் நன்னெறியுடன் வாழ்வார்கள்.இவர்கள் ஒழுக்கம் தவறாமல் வாழ்பவர்கள்.
6)வெள்ளிக்கிழமை
இந்நாளில் பிறந்தவர்கள் எந்த கஷ்டமும் இன்றி சகல சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள்.அனைத்து சுகங்களையும் இவர்கள் அனுபபிப்பார்கள்.
7)சனிக்கிழமை
நீங்கள் சனிக்கிழமை நாளில் பிறந்தவர் என்றால் உங்களிடம் பொறுமை என்பது குறைவாகவே இருக்கும்.