சரும மருக்களை எளிதில் நீக்க இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை தொடர்ந்து வாருங்கள்.உங்களுக்கு ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)சுண்ணாம்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த கலவையை மருக்கள் மீது பூசி நன்கு காயவிட வேண்டும்.இப்படி செய்தால் தோல் மருக்கள் தானாக உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)சுண்ணாம்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.இதை தோல் மருக்கள் மீது அப்ளை செய்து காயவிட்டால் அவை தானாக உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – ஒரு துண்டு
செய்முறை விளக்கம்:-
ஒரு பீஸ் இஞ்சி எடுத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை இடித்து மருக்கள் மீது பூச வேண்டும்.இதை தொடர்ந்த ஒரு வாரம் செய்து வந்தால் தோல் மருக்கள் உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வெங்காயம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த வெங்காய சாறை மருக்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள:-
1)ஆப்பிள் சீடர் வினிகர் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.
இதில் காட்டன் பஞ்சு ஒன்று நினைத்து மருக்கள் மீது வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் மருக்கள் சீக்கிரம் உதிர்ந்துவிடும்.