நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது.
மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என தன்னுடைய கணவரை வற்புறுத்தி அடிக்கடி கொடுமைப்படுத்தி வருகின்றனர், என் கணவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது மட்டுமல்லாமல் அங்குள்ள விலங்குகளுடனும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து தனது கணவர் தொலைபேசி மூலம் தன்னிடம் கூறி கதறி அழுதார். அவர் இருக்கும் இடத்தை என் கணவரால் கூற முடியவில்லை. அதனால் பலவிதமாக பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருகின்றார். தயவு செய்து அவரை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.