பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

0
207

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

கல்லூரி மாணவியின் செல்போனை திருடி அதில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் வாட்சப் நம்பருக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நான்காம் தேதி வாட்ஸ்அப் மூலம் பல ஆபாச படங்கள் வந்தது.

இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீடியோ அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டு எச்சரித்த போது, எதிர் முனையில் பேசிய ஆபாச நபர் பெண் குரலில் கேவலமாக பேசியுள்ளார். போனை துண்டித்த பிறகும் மீண்டும் மீண்டும் ஆபாச படங்கள் வந்து கொண்டே இருந்தன.

ஆபாச படம் அனுப்பியவன்

இது சம்பந்தமாக ஜனவரி 8 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி டாக்டர் விஜயகுமார் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்மணி புகார் அளித்திருந்தார். இதையடுத்து, நாட்றாம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச நபரை தேடும் பணி தொடங்கியது. ஆய்வில் அந்த நபரின் மொபைல் எண் சிக்னல் மூலம் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து “சும்மா கிழி” பாணியில் போலீசார் விசாரித்தனர். தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் வினோத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு பல பெண்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும், நம்பரை வைத்து பெண் குரலில் அநாகரிகமாக பேசி வந்ததையும் விசாரணையில் ஒப்புக் கொண்டான்.

மேலும், இதைப் போன்ற ஆபாச படம், ஆபாச செய்தி அனுப்பினால் அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு புகார் கொடுங்கள். புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு “காவலன்” செயலி தமிழக காவல்துறையால் அறிமுகபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran