தேசிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், ஆம்ஆத்மி கட்சி (‘AAP’), ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, இனி அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிடும் என்ற முடிவையும் எடுத்துள்ளது.
பாஜக-காங்கிரஸ் இரண்டும் ஒரு பக்கம்?
ஆம்ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவில் எடுத்த முடிவை விளக்கும் அறிக்கையில்mகூறியுள்ளதாவது:
“பாஜகவும் காங்கிரசும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. மக்களவை தேர்தலுக்காக உருவான INDIA கூட்டணி, இப்போது தனது நோக்கத்தை இழந்துவிட்டது. அதனால், நாம் இனி தனித்துப் போட்டியிட முடிவு செய்கிறோம்.”
மோடிக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு
பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு விசாரணைக்கான சிறப்பு கூட்டத்தை கோரி INDIA கூட்டணியில் உள்ள 16 எதிர்க்கட்சிகள் இணைந்து கடிதம் எழுதியன. ஆனால் ஆம்ஆத்மி மட்டும் கையெழுத்திடாமலேயே விலகியது, இது பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடையாளமாக விளங்கியது.
“ராகுல் பேசுவது மோடிக்கு ஆதாயம்!” – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
“ராகுல் காந்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக ஆதாயமாகவே இருக்கிறது. அதற்குப் பதிலாக, மோடி, சோனியா குடும்பத்தை சிறைவாசத்திலிருந்து காப்பாற்றுகிறார். இரு கட்சிகளும் பள்ளி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் முழுமையாக அக்கறை காட்டவில்லை.” என ஆம்ஆத்மியின் மூத்த தலைவர் அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்:
அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தனித்து போட்டி
ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளதாவது:
இனி வரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும்.
2025 இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும்.
தேசிய நலனுக்கேற்ப எதிர்க்கட்சிகளின் சிறந்த முயற்சிகளை ஆதரிக்க தயாராக உள்ளது.