அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

Photo of author

By Rupa

அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

Rupa

Amit Shah or Modi.. Only if we give this many seats will we form an alliance!! DMDK is in a hurry!!

BJP DMDK: தேமுதிக பிரேமலதா இந்த ஆண்டு எம்பி தேர்தலில் எப்படியாவது மகனை முன்னிறுத்தி பதவி வாங்கி கொடுத்து விட வேண்டும் இன்று தீவிரம் காட்டு வந்தார். ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே இருவரை தேர்வு செய்து விட்டது. அடுத்த ஆண்டு தேர்தலில் சீட் வழங்குவதாக தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக பொது செயலாளர், நாங்கள் எங்கள் கூட்டணியை பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார்.

இதனால் அதிமுக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விதமாக மாறிவிட்டது. இவ்வாறு இருக்கையில் தேமுதிக மாற்று கட்சிக்கு செல்வதற்கு முன் கட்சிக்குள் இணைத்து விட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் அடுத்த கட்ட முயற்சியில் அவர்களே பேச முன்வந்துள்ளனர். மத்திய மந்திரி அமித்ஷா மதுரை வர உள்ள நிலையில் அதற்குள் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பாஜக வின் வேகத்திற்கு தேமுதிக செயல்படுவதாக இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகள் முழுமையாக இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் கூட்டணி உறுதி செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளனர். மறுபுறம் தற்போதைய தேர்தல் கூட்டணி உறுதி செய்து விட்டால் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இருக்கும் இறுதி கட்டத்தில் எதுவும் முடிவு செய்ய வேண்டாம். அதுமட்டுமின்றி நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் மாதம் வரும் அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கூட்டணி பிரச்சாரம் குறித்து பேசலாம் என கூறியுள்ளார்களாம். வழக்கம்போல் பிரேமலதா சீனியர் பாஜக நிர்வாகிகளிடம் தனது நிபந்தனைகளை வைத்துள்ளார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் எத்தனை சீட் வழங்கப்படும் என்பது குறித்து தற்போது தீர்மானிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுள்ளாராம். தற்போது கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு பின்பு நீங்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளாராம். ஆதலால் அமித்ஷா வருகை புரியும்போது கட்டாயம் அதிருப்தி நிறைந்த கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.