கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்று அதில் நான்கில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுடன் தொடர்ந்து இந்த முறையும் கூட்டணியில் நீடிப்போம் என்றும், எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். பாமக, பாஜக கட்சிகள் கூட்டணியில் இருக்கும் எந்த அணியோடும் ஒருபோது நாங்கள் சேரமாட்டோம் என திருமா அறிவித்துள்ளார்.
அண்மையில் VCK கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த பேட்டி ஒன்றில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை திமுகவிடம் பெற்றோம். இந்த முறை 50 தொகுதிகளில் நின்று வெற்றி பெற ஆசைப்படுகிறோம், அதுகுறித்து திமுகவிடம் பேசுவோம் என்று தெரிவித்தார் வன்னி அரசு.
VCK கட்சியினரின் இந்த தொகுதி பங்கீடு குறித்து அண்மையில் VCK பற்றி கலாய்த்து தள்ளியுள்ளார் நயினார் நாகேந்திரன். கூட்டணி தான் முக்கியம், வெற்றி தான் முக்கியம், திமுக தான் முக்கியம் என திருமா சொல்கிறார், ஒரு வேலை திமுக வெறும் 2 சீட்டு மட்டும் ஒதுக்கினால் திமுகவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை தொடருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.