பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் உங்கள் கோரிக்கையை நிச்சயம் இந்த திமுக அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வன்னியர்களின் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் நம்ப வைத்து ஏமாற்றி கழுத்தறுத்துவிட்டார் என அவர் பேட்டி கொடுத்துள்ளார்.