VSK: சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமென பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது ஆரம்பித்த விஜய் கட்சியே கூட்டணியில் பங்கு என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. இதனிடையே பாஜகவும் சுதாரித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி தான் என கூறுகின்றனர். ஆனால் அதிமுக அதற்கு ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைளை மாற்று கட்சியினர் செய்கையில், இதனால் ஆளும் திமுக விற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
அதாவது, அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு வேண்டுமென கேட்க ஆரம்பித்துவிட்டனர். இல்லையென்றால் தொகுதி ஒதுக்கீட்டில் டிமெண்ட் வைத்து வருகின்றனர். இதன் வெளிப்பாட்டை சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸிடம் பார்க்க முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருமா மறைமுக விருப்பத்தை தெரிவித்துள்ளார். எல்லோரும் எங்களுக்கு திமுக 6 அல்லது 8 தொகுதிகள் தான் தரும், 10 தொகுதிகளை தாண்டி சீட் கொடுத்து ஊக்குவிக்க மாட்டார்கள் என கூறுகின்றனர். எங்களை டீ பன் கொடுத்தெல்லாம் ஏமாற்ற முடியாது.
நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள், எங்களுக்கென்று பெரிய வலிமை உண்டு. நான் இவ்வாறு சொல்வதில் ஆணவம் இல்லை. தேர்தல் மதிப்பீட்டிலும் கூறவில்லை. சமூக சூழல் களம் மாறியுள்ளது. அதை வைத்து தான் சொல்கிறேன். எனக்கு பதவி நாற்காலி மீது பெரிதாக நம்பிக்கை என்பதில்லை. அது இல்லாமல் கூட கீழே அல்லது பிளாஸ்டிக் சாரில் கூட அமர தயார். ஏன் தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என்று கூட அறிவிக்கலாம். எந்த தேர்தலிலும் சீட் பேரம் பேசுவதற்காக இந்த கட்சி இல்லை என தெரிவித்ததோடு, கோவிலில் வைத்த திருநீரை அளித்தது குறித்தும் விளக்க தெரிவித்தார்.