ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டார். தற்போதும் அவ்வப்போது சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.
அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதை பொருளை கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தீங்கிரை என்ற படத்தை பிரசாந்த் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன் நடித்துள்ளார். தீங்கிரை திரைப்படத்திற்கு தர வேண்டிய சம்பளத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பிரசாந்த் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை.
பணம் கேட்டு ஸ்ரீகாந்த் பிரசாந்தை தொடர்பு கொண்ட போது அடிக்கடி கொக்கைன் போதை பொருளை கொடுத்து சம்பளத் தொகையில் கழித்து வந்துள்ளார். இதற்கு மேல் ஸ்ரீகாந்த் கொக்கைன் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.
கைதாவதற்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் பாக்கெட் வாங்கினேன். எனது நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். படத்திற்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி பற்றி பிரசாந்திடம் கேட்டபோது எனக்கு கொக்கைன் கொடுத்து சம்பளத்தை ஈடு கட்டினார். தொடர்ந்து சம்பளம் கேட்கும் போதெல்லாம் என்னிடம் கொக்கைன் கொடுத்து என்னை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்கியது பிரசாந்த் தான் என அதிமுக நிர்வாகி மீது குற்றம் சாட்டி உள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்த விஷயத்தில் ஸ்ரீகாந்த்க்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா இல்லை வேறு ஏதேனும் நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இயக்குனர் விஷ்ணுவரதனின் சகோதரர் கிருஷ்ணாவும் தற்போது இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார். அவர் கேரளா சென்று விட்டதாகவும் அவருடைய நம்பர் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் நடிகர் கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.