DMK: வைஷ்ணவி என்னும் பெண் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இவருடைய தாய் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தவெக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தவெகவிற்காக வேலை செய்து திமுகவை வறுத்தெடுத்தார். இதனால் இவர் இணைய தளங்களில் மிகப்பிரபலம்.
பின்னர் தவெகவில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திமுக கட்சியில் சேர்ந்தார். இந்த வைஷ்ணவி எந்த கட்சிக்காகவும் இதுவரை களப்பணி ஆற்றியதில்லை. இவர் ஒரு பெண், இளைஞர் மட்டுமே. திமுகவில் வைஷ்ணவி சேர்ந்தவுடன் இவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. எல்லா ஆன்லைன் youtube சேனல்களும் இவரை பேட்டி எடுக்க படையெடுத்தன. திராவிடம் என்ற சொல்லுக்கு கூட அர்த்தம் தெரியாமல் திமுக கட்சியில் வைஷ்ணவி சேர்ந்ததை சமூக வலைத்தளங்களில் எல்லோரும் கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அண்மையில் இவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ இணைய தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த தரணி ரமேசு என்பவர் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்புகள் வகித்த 350 பேரை தேர்தல் நேரத்தில் திமுகவில் இணைத்தவன் நான். தற்போது திமுக கட்சியில் புதுக்கோட்டையில் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று 10க்கும் மேற்பட்ட முறை அண்ணா அறிவாலயத்திற்கு கடிதம் எழுதியிருந்தேன்.
துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச வேண்டும் என தொடர்ந்து மடல்கள் எழுதி வருகிறேன். இதுவரை நான் துணை முதல்வரை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் தவெக கட்சியில் இருந்துகொண்டு திமுகவை மிகவும் மோசமாக விமர்சித்த வைஷ்ணவி திமுகவில் இணைந்த உடன் உதயநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலிருந்து நம்முடைய திமுக கட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நினைத்து பெருமைப்படுறேன், நம் துணை முதல்வரை பாராட்டுகிறேன், keep it up இளையவரே என்று தனது மனக்குமுறலை facebookயில் பதிவிட்டுள்ளார் தரணி ரமேசு.