DMK: திமுகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஸ்டாலினுக்கிடையே வெளியே தெரியாத அளவிற்கு உட்கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவி வருகிறது. அதிலும் துரைமுருகனுக்கு உதயநிதியின் அசுர வளர்ச்சியானது சிறிதும் பிடிக்கவில்லை. இதனை பல மேடைகளில் அவர் சூசகமாக பேசியதை வைத்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு எதிராக துரைமுருகனை டம்மி ஆக்க வேண்டும் என உதயநிதியும் பல செயல்பாடுகளை முன்னிறுத்தினார்.
சமீபத்தில் துரைமுருகன் நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டவர் என்று சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கட்சி சம்பந்தமான தகவல்களை வேறு ஒருவரிடம் பகிர்ந்ததாக ஸ்டாலின் காதிற்கு சென்றதாக கோட்டை வட்டாரங்கள் பேசினர். இப்படி இருக்கையில் தற்போது ஐந்து பொதுச் செயலாளர்கள் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு உதயநிதி பொதுச்செயலாளராக நியமிக்கப் போகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்தது.
ஆனால் ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது துரைமுருகன் நான் பொதுச்செயலாளர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது வயது மூப்பாகிவிட்டது, அதிலும் தேர்தல் வரும் சமயத்தில் துடிப்புடன் செயல்படும் வேறொருவரை நியமிக்கலாம் என்ற ஒரு யோசனையில் உள்ளாராம். அந்தப் பதவியையும் தனக்கே தர வேண்டுமென்று உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளதால் துரைமுருகனிடம் சுமுகமான முறையை அணுகியுள்ளனர்.
அவராகவே பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் துரைமுருகன் ஸ்டாலினுக்கு பல டிமாண்டுகளை வைத்துள்ளாராம். தற்போது எம்பி ஆக இருக்கும் எனது மகன் கதிர் ஆனந்துக்கு அமைச்சரவையில் முக்கிய ஒரு பொறுப்பை வழங்க வேண்டும். எனக்கு அடுத்து எனது வாரிசு அரசியல் பயணமானது தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.
இது செய்தால் மட்டுமே எந்த ஒரு சர்ச்சையுமின்றி கட்சியை விட்டு விலகுவேன் என்று கூறியுள்ளார். இது ரீதியாக ஸ்டாலின் மற்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.