
BJP: கன்னியாகுமரியில் இருநூறு ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ராமர் கோவிலானது மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவில் தற்போதைய பாஜக மாநில தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அண்ணாமலை மாணவர்கள் சனாதனத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் பேசியதாவது, குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது பொட்டை அழித்துக் கொண்டும், வெளியே வரும்போது பொட்டு வைத்துக் கொண்டும் இருந்தால் திருமா செய்வது போல் தான் நாமும் செய்கிறோம், அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். நாம் அனைவரும் சமம் தான். மத சார்பின்மையை கற்பிப்பதாக கூறி குழந்தைகளை ருத்ராட்சம் மற்றும் திருநீர் வைக்க கூடாது என கூறுகிறோம். ஆனால் அது மிகவும் தவறு.
நம்முடைய மத அடையாளத்தை குழந்தைகளிடம் சொல்லித் தர வேண்டும். அதேபோல மற்ற மதமும் இதேபோல் ஒன்றுதான் என்பதையும் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக அரசு உணர வேண்டும் என்றும் கூறினார். அதிலும் ஒரு பெண் குழந்தை பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லவில்லை என்றால் இந்த குழந்தை எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றும் என்று கேள்வி கேட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்து மத தர்மத்தில் நம் வாழ்கிறோம் அதனால் குழந்தைகள் திருநீறு ருத்ராட்சம் அணிந்து செல்லட்டும் எனக் கூறியுள்ளார். திருமாவளவனை ஒப்பிட்டு குழந்தைகளை வைத்து சனாதனம் குறித்து தற்போது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.