விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் நேற்று திடீரென தீ விபத்து!

0
47

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து கம்பெனியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடா பகுதியில் அமைந்திருக்கும் ஜெ.என். பார்மா சிட்டி தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த ஆலையின் ஒரு உலை வெடித்ததால் தீ ஆலை முழுக்க பரவி உள்ளது.இந்த தீ விபத்து ஆனது நேற்று இரவு 10.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காலை முழுவதும் போராடி தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்தில் 3 தொழிலாளர்கள் வேலை பார்த்துள்ளனர்.இதில் இருவரை காயமின்றி மீட்டனர்.ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனை அடுத்து மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்களில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வந்து பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை ஆலையில் பரவிய தீயை மொத்தமாக அனைத்து உள்ளனர்.தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.