நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள் !!

0
66

தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சிறு தானிய மற்றும் பணப் பயிர்களான பருத்தி மற்றும் துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளனர். தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகளின் கிணறு மற்றும் ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

இதனையடுத்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் தற்போது, நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர் மழையால் தக்காளி ,துவரை, பருத்தி, போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.