இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு!

0
197

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 490 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,23,097 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,323 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 76,03,121 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 91.96 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 5,41,405 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 10,46,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 11,17,89,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஉச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!
Next articleதொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here