ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!

0
183

அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ஐந்து நிமிடத்திற்கு திநகர் வந்தடைந்தது.

வரும் வழி முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு ,அதோடு தமிழக அரசின் மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து நள்ளிரவு முழுவதும் பல இடங்களைத் தாண்டி 3:30 அளவில் சென்னையில் எல்லையை வந்தடைந்தார் சசிகலா.

அதன்பிறகு ராமவாரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிள்ளத்திற்கு டிடிவி தினகரனுடன் போன சசிகலா இங்கு எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். சில நிமிடங்கள் அந்த இடத்தில் அமர்ந்து தினகரனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து கிளம்பி சென்னை தி நகரில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு வந்து சேர்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

சைதாப்பேட்டையில் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புக்கு பிறகு மெதுமெதுவாக திநகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சசிகலா அந்த சமயத்தில் நேரம் காலை 6 மணி 25 நிமிடம் மேளம், நாதஸ்வரம் முழங்க பெண்மணிகள் உட்பட அநேக பேர் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

வீட்டிற்கு போன சசிகலா அவர்களுக்கு திருஷ்டி சுற்றி வரவேற்பு கொடுக்கப்பட்டது. டிடிவி தினகரன் சசிகலாவுடன் வீடு வரையில் வந்தார் விடிய விடிய பயணம் செய்த காரணத்தால், இன்று அவர் முழுமையாக ஓய்வு எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றோ அல்லது நாளையோ பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleபெங்களூருவில் தொடங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் ! டிநகரில் முடிவுற்றது!
Next articleநீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here