போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு!

0
132
Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?
Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு!

இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு விடாமல் தொரத்துவது போல விவாயிகளின் போராட்டமும் கைவிடாமல் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

இவர்களின் போராட்டமானது இன்றுடன் 131 வது நாளாக நடைபெற்று வருகிறது.இதனால் இந்த போராட்டத்திற்கு நடிகர்,இயக்குனர் என அனைவரும் ஆதரவு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஜனவரி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்ட்டர் போராட்டத்தை நடத்தினர்.அது பெருமளவு கலவரத்தை  ஏற்படுத்தியது.இந்த போராட்டம் தொடங்கிய 11 நாட்களிலே நாடு தழுவிய முழு அடைப்பு தொடங்கியது.அப்போதும் அனைத்து மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நம் தமிழ்நாட்டில் திமுக மட்டும் தான் தன் ஆதரவு குரலை எழுப்பியது.இந்த போராட்டம் தற்போது நான்கு மாதங்கள் நிறைவேறும் நிலையில்,நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பாஜக-வுடன் அதிக நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

அதனையடுத்து வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி.அந்த பண்டிகையின் போது விவசாயிகள் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அந்த நகலை தீயில் போட்டு எரித்தும் ஹோலி கொண்டாடினர்.இவர்கள் இவ்வாறு ஹோலி கொண்டாடியதை விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் வெளியிட்டார்.அதன்பின் அவர் தெரிவித்தது,வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு புதிதாக தனி சட்டம் அமைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தவ போவதாக இல்லை என விவசாயிகள் கூறுவதாக தெரிவித்தார்.

மத்திய அரசானது 11 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.அதனையடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் உணவு கழகத்தின் அலுவலகங்கள் முற்றுகையிடுவதாக தெரிவித்தனர்.இவர்கள் புதிய புதிய முறைகளில் போராட்டங்களை கையாண்டாலும் மத்திய அரசு இவர்கள் கேட்பதை நிறைவேற்றும் நிலையில் தற்போது இல்லை.

ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் போராடி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கிஷான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியது,வேளாண் சட்டங்கள் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளோம்.அடுத்த 5 அல்லது 6 மாதங்களுக்குள் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம் இவ்வாறு ராஜேஷ் திகைத் கூறினார்.