வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

0
300

தமிழ்நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரையில் மிகவும் அமைதியான முறையில் அதே நேரம் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை எல்லோரும் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றார்கள் தமிழத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டாகிவிட்டது.அதனால் தற்போது வாக்கு எண்ணும் மையங்கள் தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதிகளுக்கான வாக்குகள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் எனப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல திருத்தணி திருவள்ளூர் பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரியில் என்ன படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பூந்தமல்லி, ஆவடி, பெருமாள் ஸ்ரீ ராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் என்ன படம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குகள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் எனப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் ஆர்கே நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் வாக்குகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் என்ன படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன படம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் என்சிசி கல்லூரியில் என்ன படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல செங்கல்பட்டு திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் தண்டரை ஆசான் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செய்யூர் மதுராந்தகம் நெல்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் ஏசிடி பொறியியல் கல்லூரியில் எனப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உத்திரமேரூர், ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை காரப்பேட்டை பல்கலைகழகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஇன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி!
Next articleகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here