State

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!

Photo of author

By Hasini

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!

Hasini

Updated on:

Button

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!

கடந்த ஒரு இரண்டு வருட காலமாகவே கொரோனா காரணமாக உலக அளவில் மனித கடவுள்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களின் நலன் கருதி இவர்கள் சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. எங்கோ ஒரு சிலர் மக்களிடம் எரிந்து விழுந்தாலும், பல மருத்துவர்கள் நோயாளிகளை தாய் அன்புடனும், பரிவுடனும் பார்த்தனர்.

இந்த கொடிய கோரோனா பொது மக்களை எந்த அளவு பாதித்ததோ, அந்த அளவு மருத்துவர்களும் இப்பெரும் தொற்றினாலும் பாதிக்கப்பட்டு விட்டனர். சில மருத்துவர்கள் தனது உயிரையும் பொருட்படுத்தாது, முன்கள பணியாளர்களாக பணியாற்றி உயிரை விட்டதும் குறிப்பிடத் தகுந்தது.

இதில் என்ன கொடுமை என்றால் கொரோனாவின் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் பல இடங்களில் மருத்துவர்களை வெறி கொண்டு தாக்கி, அவர்களின் இறப்புக்கு இவர்கள்தான் காரணம் என வசை பாடிய கொடுமைகளும் நடந்தேறின.

நேற்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப் பட்ட நிலையில், தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில், இவ்வாறு பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தார்.

கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே தற்போதுள்ள புதிய அரசாவது மருத்துவர்களின் ஊதிய  உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

Leave a Comment