தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

0
223

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செய்து வருகிறது,.

நிச்சயம் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் உறுதியாக நடந்தே தீரும் என்று நேற்று நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது., இதில் தமிழக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இன்னும் 15 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும்,. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுங்கள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நாம் பெரும் வெற்றியை பெற்றாக வேண்டும் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்,. மேலும் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தற்போதே தொடங்குங்கள் என்று அறிவுறுத்தவே நடைபெற உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கின்றன.,

இதற்கிடையே தமிழக காவல்துறை தலைவர் கே.திரிபாதி அவர்கள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்,. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்,. உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற உறுதுணையாக இருக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை இது தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,.

மேலும் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீட்டு இடங்கள் பற்றி தற்போது மறைமுகமாக பேசி வருகிறது,. மதிமுக,நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவோர் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை தலைமையிடம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது,.

கடந்த மாதம் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உள்ளாட்சி தேர்தல் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleசோழர் குல வாரிசுகளால் ராஜ ராஜன் பள்ளிப்படையில் பிரமாண்டமாக நடைபெறும் 1034 ஆவது ஆண்டு சதய விழா
Next articleதமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here