மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0
229

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது

இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது

ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜெனாட் என்ற பந்துவீச்சாளர் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றி பெற முக்கிய காரணம் என்பதும் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டியில் இன்று நடைபெறும் என்பதும், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே, தொடரை வெல்லும் அணியாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Previous articleஇலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்
Next articleவெளிநாட்டில் திமுக எம்பியும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து அடித்த கூத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here