அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

0
221

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள உள்ள அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் திமுகவின் தலைமை அலுவலகம் ஆகும். இந்த அலுவலகத்தில் எப்போதும் திமுக தொண்டர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருவார்கள்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் இந்தி மொழியில் கூறப்படதாகவும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவுடன் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் இருந்த திமுக தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு அண்ணா அறிவாலய கட்டிடம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது

Previous articleதிமுக ஆரம்பித்து வைத்ததை சிறப்பாக செய்து முடித்த பாமக
Next articleஇலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here