ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

0
88

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

கடந்த ஒரு சில மாதகாலமாக வெங்காயத்தின் விலை படு உச்சத்தில் உள்ளன. விளைச்சல் குறைவாழும் அதிக மழை காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.அதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கின்றது.

கடந்த சில நாட்களாக நூறைத் தொட்ட வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் 150 தொட்டது மத்திய அரசும் வெங்காயத்தின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது.

வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டும் வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை வெங்காயத்தின் விலை குறைய ஏறக்குறைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே மக்கள் கண்ணில் தண்ணீர் வருகின்றது.

இது ஒருபுறமிருக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இப்போது மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி போட்ட ஒரு ட்வீட் இப்போது ட்ரெண்டாகி வருகிறது 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் விலை 85 ஆக இருந்தது அதுவரை அந்த விலைதான் அப்போது உச்சப்பட்ச விலையாகக்கருதப்பட்டது.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருந்த ஸ்மிருதி இரானி ஒரு ட்வீட் செய்திருந்தார் அதில் வெங்காயம் வாங்குபவர்களை வருமானவரித்துறை உற்றுநோக்கி இருக்கிறது அதனால் யாரும் வெங்காயத்தை வாங்க வேண்டாம்.என்று ட்வீட் செய்து இருந்தார்.

85 ரூபாய்க்கே வருமானத்துறை உற்று நோக்குகிறது என்றால். இப்போது விற்கும் விலைக்கு வருமானத்துறை என்ன செய்யும் என்று நெட்டிசன்கள் அந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி கிண்டலடித்து வருகின்றனர்.

author avatar
CineDesk