“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!!

0
303
"A begging vessel in the hands of a child of God"!! A. Raza registered a controversy about Modi!!
"A begging vessel in the hands of a child of God"!! A. Raza registered a controversy about Modi!!

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பாஜக 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெருமைப்பாண்மையுடம் ஆட்சியை தக்கவைத்தது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 01 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது.இதில் பாஜக தலைமையிலான “என்டிஏ” கூட்டணி 292 தொகுதிகளையும்,காங்கிரஸ் தலைமையிலான “இந்தியா” கூட்டணி 234 தொகுகளையும் கைப்பற்றியுள்ளது.தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெற வில்லை.இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து ஜூன் 08 ஆம் தேதி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சியமைக்கிறது.

மேலும் 2014,2019 ஆம் ஆண்டை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமராக தேர்வாக உள்ளார்.இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக,முழு மெஜாரிட்டி பெறாது குறித்து திமுக எம்பி ஆ.ராசா அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்! அட்சயப் பாத்திரத்தோடு ஆந்திராவுக்கு பீகாரும்; கடவுளை மற மனிதனை நினை! பெரியார் வாழ்கிறார்!! என்று திமுக எம்பி ஆ.ராசாவின் பதிவு வைரலாகி வருகிறது.