ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

0
79
A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!
A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

மதுரை ஆனையூர் அருகேயுள்ள எஸ்விபி நகர் உள்ளது. இங்கு சக்தி கண்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இதே பகுதியில் சோப்பு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழ் ரூமில் உறங்க சென்றனர்.

கணவன் மனைவி இருவரும் மேல் அறையில் உறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த ரூம் ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வர ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் புகை பரவி விட்டது. அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், கதவைத் தட்டி குழந்தைகளிடம் விஷயத்தை சொல்லினர்.

குழந்தைகளும் அந்த புகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பரிதாபமாக சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேருமே தீயில் கருகி உயிர் இழந்து இருந்தனர் என்பது தெரியவந்தது.

புகை வந்த உடனேயே தம்பதிகள் இருவரும் கதவைத் திறந்து வெளியே வர முயன்று உள்ளதாகவும், ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களால் தப்பிக்க முடியாமல் அவர்கள் உடம்பிலும் தீப்பற்றி எரிந்து உள்ளது என்றும், கதவு பூட்டியிருந்ததன் காரணமாக அவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் போய் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். இதனால் தீயிலேயே இரண்டு பேரும் உடல் முழுவதுமாக கருகிவிட்டனர்.

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, இருவரது உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சார கசிவினால் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.