காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

0
29
#image_title

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல சில தினங்களுக்கு முன்னர் மின்சார இரயில் தண்டவாளத்தை விட்டு பிளாட்பார்ம் மேல் ஏறி நின்ற சம்பவம் நடந்தது. இதே போல இன்று(அக்டோபர்3) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரக்கு இரயில் சாலைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய இரயில் நிலையத்தின் அருகே வந்து அங்கிருந்து பொழுது சரக்கு இரயில் விபத்தில் சிக்கியது.

அதாவது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த இரயில் திடீரென்று தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலைக்கு வந்தது. மேலும் அந்த சரக்கு இரயில் அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மீது மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இருசக்கர. வாகனங்கள் மீது மதிய சரக்கு இரயில் சாலைக்கு வந்து நின்றது. சரக்கு இரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்த சம்பவம் குறித்து இரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலைக்கு வந்த சரக்கு இரயிலை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.