Home Breaking News தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

0
தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!
#image_title

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் முற்றிலுமாக சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயனடைந்த 4 பயணிகள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பின்னர் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Savitha