வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

Photo of author

By Parthipan K

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

Parthipan K

A learning opportunity given by the UK government to the unemployed Indian youth! Go ahead now!

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

இந்தியாவுடன் அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,பிரான்ஸ் ,ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளும் ,ஐரோப்பிய கூட்டமைப்பு ஒன்று சேர்ந்துள்ள அமைப்பு ஜி-20 என அழைக்கப்படுகின்றது.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலித்தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாவில் நவம்பர் 15,16 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் சோகோ விடோடோ அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாற்கு சென்றார்.இந்நிலையில் ஜி 20 நாடுகள் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.இந்தோனேசியாவில் ஜி 20 ,நாட்டில் பிரதமர் மோடியும் ,இந்திய வம்சாளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் சந்தித்து சில மணி நேரம் உரையாடினார்கள்.

அதன் பிறகு இங்கிலாந்து அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பட்டபடிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் குறிப்பிட்ட இந்த விசாவைப் பெற்று இரண்டு ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.