பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

0
116
A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.
A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

மாதவரம் பால் பண்ணை பேங்க் காலிலேயே சேர்ந்தவர் யுவராஜ் அவரது மனைவி சினேகா வயது 21. இவர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மாத குழந்தையும் உள்ளது.காலையில் இவர்கள் இருவரும்  இரு சக்கர வாகனத்தில் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றனர்.

சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வரும்வழியில்  மாதவரம் ரவுண்டான அருகே இவர்களுக்கு பின்னால் ஒரு ஆந்திர மாநில லாரி  வந்து கொண்டிருந்தது. ஓரமாக வந்து கொண்டிருந்த தம்பதிகள் மீது அந்த லாரி மோதியது.

இதனால் நிலை தடுமாறி இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரம் சினேகா மீது ஏறியது. இதில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது கணவன் யுவராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்கள் தூக்கி சென்ற ஒரு மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியது. இதைப் பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இந்த லாரி ஓட்டுனரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Parthipan K