இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

0
86

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

வேலை வாங்கி தருவதாக கூறி 64 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா என்னும் பெண்மணி.கணவனை இழந்த பெண்மணியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மகனின் பள்ளி தோழன் ஒருவர் பணம் கொடுத்தால் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளார்.இதனை நம்பி தனது மருமகனுக்கு
ரயில்வே துறையில் வேலை வேண்டும் என்று அந்த நபரிடம் ஜமுனா 4 லட்சத்தை கொடுத்துள்ளார்.பணம் கொடுத்து நாட்களாகியும் வேலை வாங்கித் தராத காரணத்தினால் அந்த நபரிடம் ஜமுனா விசாரித்துள்ளார்.

அதற்கு அந்த நபர் ஒருவருக்கு மட்டும் வேலை வாங்கித் தர முடியாது.குழுவாக தான் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியிருக்கிறார்.மேலும் இதனையும் நம்பிய ஜமுனா இவர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என 16 பேரிடம் இருந்து 64 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்ற அந்த நபரும் அவருடைய மனைவியும் திடீரென வீட்டை காலி செய்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.தற்பொழுது தான் அந்த நபர் ஏமாற்றியுள்ளதை அறிந்த ஜமுனா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.புகாரினை பெற்ற காவல்துறையினர் அந்த தம்பதியினரை தேடி வருகின்றனர்.