உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி
RCB அணியில் அண்ணன் தம்பியை போல பழகியவர்கள் கோலி மற்றும் AB டிவில்லியர்ஸ். ABD சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் சதம், அரைசதம் என பல சாதனைகள் படைத்தவர்தான் ABD.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லோக்கல் கிரிக்கெட் விளையாடும்போது கண்ணில் பந்து பட்டு பார்வை கோளாறால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாழ்க்கையில் இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை என்று அறிவித்தார்.
RCB அணிக்காக 2011யில் இருந்து 2021 வரை தொடர்ந்து 10 வருடங்கள் விளையாடினார். அதனால் கோஹ்லியுடன் இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அண்மையில் 18 வருடங்களுக்கு பிறகு RCB ஐபில் கோப்பையை வென்றபோது கூட ABD அந்த போட்டியை மைதானத்தில் வந்து கண்டுகளித்தார். போட்டியில் RCB வென்றபிறகு இவரும் RCB ஜெர்ஸி அணிந்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்தார்.
அண்மையில் இவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கோஹ்லி அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தைக்கு தயாராகிய பிறகு எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது, அனுஷ்கா pregnentட்டாக இருக்கிறார் என்று கோஹ்லி தன்னுடைய நெருங்கிய நண்பர் ABDயிடம் தெரிவித்துள்ளார்.
நட்பாக கோஹ்லி சொன்ன இந்த விஷயத்தை ABD ஒரு நேரலையில் பேசியதால் கோஹ்லிக்கும், ABDக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். இதனால் விராட் ABDயிடம் 6 மாதகாலம் பேசாமல் இருந்துள்ளார். அதற்கு பிறகு தான் மீண்டும் ABDயிடம் கோஹ்லி பேசியதாக அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார் ABD.