உலகிலேயே மக்கள் மிகவும் அஞ்சப்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். பெரும்பாலான மரணத்திற்கு காரணம் இதுவாகவே இருக்கின்றது. உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் செல்கள் உருவாக கூடும் நமது உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ள நிலையில் அந்த செல்கள் இயல்பான செயல்பாட்டை பராமரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு பலமுறை விரிவடைந்து பெருகும். ஆனால் எப்போதாவது இந்த செல் பிரிவு பாதிக்கப்பட்டு அசாதாரண செல் வளர்ச்சி ஏற்படும் பொழுது இது புற்று நோயாக மாறுகின்றது.
இந்நிலையில் உடலின் ஒரு சிறிய பகுதியிலோ அல்லது உறுப்பிலோ தோன்றி பிறகு மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புற்றுநோய் சிகிச்சையிலும் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகின்றது. ஆரம்ப காலகட்டத்திலேயே அறிகுறிகளை கண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டால் மரணத்தை தடுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. புற்றுநோய் ஏற்படும் அறிகுறியாக வாயு பிரச்சனை அல்லது காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம்.
ஆனால் கல்லீரல் மற்றும் கணைய புற்று நோய்க்கு ஆரம்ப அறிகுறி கிடையாது. வயிற்று வலி, இரத்தப்போக்கு, குடல் அல்லது சிறுநீர்ப்பை செயற்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், பசியின்மை, வயிற்று கோளாறு, எடை குறைதல், தொடர்ந்து இருமல், சுவை இழப்பு ஆகியவை அறிகுறியாக கூறப்படுகின்றது. இந்த அறிகுறிகளை கண்டவுடன் நாம் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொண்டால் நோயின் ஆபத்தை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற்று மரணத்திலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.