ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!! 

0
70

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!!

வேலூரில் ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் இருந்த மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பாலம்பாக்கம் என்ற பகுதியில் தாமு என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகின்றார். மாணவன் தாமு தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்31) ஆன்லைன் விளையாட்டில் விளையாடிய தாமு தோல்வி அடைந்துள்ளார். இந்த தோல்வியால் மாணவன் தாமு அவர்கள் தொடர்ந்து விரக்தியில் இருந்துள்ளார். தோல்வி அடைந்தது தாங்க முடியாமல் இருந்த மாணவன் தாமு அவர்கள் நேற்று(ஆகஸ்ட்31) இரவு விட்டின் மாடிக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவன் தாமு அவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவன் தாமு அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாமு அவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.