மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!!

0
148
#image_title
மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!!
மத்திய பிரதேசம் கார்கோனில் நடந்த கோர விபத்தினால் மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று முன்தினம் கேரளாவில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்ட நிலையில் இன்று இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் ஒன்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் தடுப்புக்களை மோதி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்ததை அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை மீட்டனர். மத்திய பிரதேச அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
நேற்று முன்தினம் கேரளா மாநிலம் மலப்புரம் அருகே படகு கழிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து அந்த சோகம் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த இந்த விபத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.