தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

0
62
A total of 16540 special buses for Deepavali! Six places arranged!
A total of 16540 special buses for Deepavali! Six places arranged!

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு கூறினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் மூன்றாம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2100 பேருந்துகள் உடன் 3506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 9806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை முடிந்த பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 5 ஆம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 319 சிறப்பு பேருந்துகளும் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஐந்தாயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17719 பேருந்துகளும் இயக்கப்படும் சென்னையிலிருந்து மட்டும் ஆறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளது.

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்றுவிடும். இது முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்றதாக வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லலாம் என்று கூறியுள்ளார்.

www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணங்களை மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்களாக 12 மையங்கள் இயங்குகின்றன. பயணிகளின் வசதிக்காக இருபத்தி நான்கு மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் ஏதாவது புகார்கள் இருப்பின் தெரிவிப்பதற்கும் இரண்டு தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளார். 9445014450, 9445014436 இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்க இரண்டு தொலைபேசி எண்களும் கொடுத்துள்ளார். 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. பயணிகள் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் இருபத்தி நான்கு மணிநேரமும் செயல்படும் என்று தெரிவித்தார். ஆனால் பயணிகள் கண்டிப்பாக பயணத்தின் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.