ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்!

0
43
#image_title

ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, குஷி, பேரழகன், சந்திரமுகி  உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார்.

ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார். மொழி படத்திற்காக இவர் கலைமாமணி விருது பெற்றார்.

ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

ரஜினி கேரியரில் ரொம்ப முக்கியமான படம் என்றால் அது சந்திரமுகிதான். இப்படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கிய ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படம் வசூலை வாரியது. இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா அசத்தலாக நடித்தார்.

சந்திரமுகி படப்பிடிப்பில் ஜோதிகாவின் கண்களை க்ளோசப் ஆக வைத்து காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார் பி.வாசு. அப்போது, ரஜினி ஜோதிகாவின் கண்களை மானிட்டரில் பார்த்துவிட்டு ‘இந்த படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் அடிக்கும். அதற்கு ஜோதிகா முக்கிய காரணமாக இருப்பார்’ என சொன்னாராம். அவர் சொன்னதுபோலவே சந்திரமுகி படம் சூப்பர் ஹிட்டடித்தது.

author avatar
Gayathri