6 மாதம் கழித்துதான் ஓடிடியில்…. அமீர்கானின் சூப்பர் முடிவை அனைவரும் பின்பற்றுவார்களா?

0
83

6 மாதம் கழித்துதான் ஓடிடியில்…. அமீர்கானின் சூப்பர் முடிவை அனைவரும் பின்பற்றுவார்களா?

அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும். கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் இன்று பேன் இந்தியா ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளில் படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவதை அடுத்து அமீர்கான் தனது லால் சிங் சத்தா படத்தை 6 மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் படத்தை திரையரங்குகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடியில் படங்கள் வெளியாகின்றன. இதனால் ரசிகர்கள் பொறுத்திருந்து ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் மனப்பாண்மை உருவாகியுள்ளது.