இந்தியாவில் வாகனப் பாதை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 1 முதல், புதிய இருசக்கர வாகனங்களில் (ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்) கட்டாயமாக ABS (Anti-lock Braking System) பொருத்தப்பட வேண்டும் என்றும், வாங்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 2 BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை?
தற்போது, 125ccக்கு மேற்பட்ட வாகனங்களுக்கே மட்டுமே ABS கட்டாயம். இதனால், சுமார் 40% வாகனங்களில் இத்தகைய பாதுகாப்பு வசதி இல்லாத நிலை உள்ளது. ABS மூலம் திடீரென பிரேக் அடித்தாலும் சக்கரங்கள் பூட்டு ஏற்படாமல், வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இதனால் விபத்து ஏற்படும் சாத்தியம் 35%–45% வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரட்டை ஹெல்மெட் கட்டாயம்!
இப்போது ஒரு ஹெல்மெட் மட்டும் வழங்குவது வழக்கம். ஆனால், 2026 முதல் வாகன உரிமையாளருக்கும் பின்னாடி பயணிப்பவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய, 2 ஹெல்மெட்டுகள் (BIS சான்றளிக்கப்பட்டவை) கொடுக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.
கடுமையான முடிவுக்கு காரணம்?
இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 44% இருசக்கர வாகன பயணிகளே உயிரிழப்பதற்கான காரணமாக உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததாலும், வாகன கட்டுப்பாட்டின்மை காரணமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள், இந்திய சாலைகளை பாதுகாப்பானவையாக மாற்ற அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டால், இது மில்லியன் கணக்கான இருசக்கர பயணிகளுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பாக அமையும்.