ஊஞ்சல் ஆடியதால் ஏற்பட்ட விபத்து! பதைபதைத்த நிமிடங்கள்!

0
114
Accident caused by swinging! Minute minutes!
Accident caused by swinging! Minute minutes!

ஊஞ்சல் ஆடியதால் ஏற்பட்ட விபத்து! பதைபதைத்த நிமிடங்கள்!

ரஷ்ய குடியரசில், டாகெஸ்தானில் அமைந்துள்ளது அந்த சுலக் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு 6300 அடி உயரம் கொண்டது. அங்கு சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து போவது வழக்கம் தான். இங்கு உயிருக்கு ஆபத்தான த்ரில்லிங்கான ஊஞ்சல் சவாரி பிரபலமானது. பள்ளத்தாக்கின் விளிம்பில் ஒரு ஊஞ்சல் கட்டி இருப்பார்கள்.

உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் அந்த ஊஞ்களில் ஆடலாம் என்று ஒரு இடத்தில் இருக்கும் அந்த ஊஞ்சலை நாம் உபயோகப்படுத்தும் பட்சத்தில், பணியாளர் ஒருவர் ஊஞ்சலை கொஞ்சம் கொஞ்சமாக வேகப்படுத்தி தள்ளிவிடுவார். இங்கேதான் அந்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் அரங்கேறியது.

இங்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஆடும் எண்ணத்துடன் முன்வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் ஊஞ்சலில் அமர, பணியாளர் ஒருவர் ஊஞ்சலை தள்ளி விட ஆரம்பித்தார். முதலில் சிறிதாகவும், குறைவாகவும், ஆடப்பட்ட நிலையில் சிறிது சிறிதாக அதன் வேகத்தைக் கூட்டிக்கொண்டே சென்றார். அவர்களும் ஆரம்பத்தில் இந்த ஊஞ்சல் சவாரியில் மிக மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஊஞ்சலின் வேகம் காரணமாக அது கட்டப்பட்டிருந்த செயின் அறுந்து விழுந்தது. ஊஞ்சல் வேகமாகஆடியதன் காரணமாக இந்த பெண்களால் கீழிறங்க நொடிப்பொழுது கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நிலைதடுமாறி விழுந்தார். நல்ல வாய்ப்பாக ஊஞ்சல் ரொம்ப தூரம் சென்று அவிழ்த்துவிடாமல், குறைவான உயரத்திலேயே விழுந்ததால், அவர்கள் உயிர் பிழைத்தனர். பலத்த காயங்கள் ஏற்படாவிட்டாலும் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதால், விபத்து நடந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியது.

அந்த வீடியோ வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
https://twitter.com/i/status/1415209072090042372